ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது



நண்பர்கள்
'ஃபோன வையுடா' என்றார்கள்
நீயோ
'அப்புறம்' என்றாய்!

அம்மா
'ஊருக்கு வா' என்றாள்
நீயோ
'லீவ்ல எங்க போகலாம்' என்றாய்!

அப்பா
'பேசி ஒரு வாரமாச்சுல்ல' என்றார்
நீயோ
'மதியத்துல இருந்து ஏன் பேசவேயில்ல' என்றாய்!

ஊர்
'பைத்தியக்காரன்' என்றது
நீயோ
'செல்லக்குட்டி' என்கிறாய்!




ஆழி வெப்பத்தில்
ஆவியாதலும்
மழையாதலுமாக
மாறிக்கொண்டே இருக்கிறது
வீடற்ற துளிகள்

கிழக்கில் தோண்டி
மேற்கில் புதைத்த
வண்ணமிருக்கிறது
பூமி தனது ஒளியை

உருவமற்ற நதியில்
வீழ்ந்து கிடக்கும்
சூரிய சந்திரர்களும்
கலைந்தபடியே இருக்கிறார்கள்
குறிப்புகளற்ற வாழ்க்கையில்
கைக்கடங்காத பெருவுருளையைப்
பற்றிக் கொள்ளும் முயற்சியில்
வழுக்கி விழுந்தபடியே
இருக்கிறது நிலையைத்
தேடும் ஜீவ கிரணங்கள்.